சிறப்பு மன்றாட்டு


சிறப்பு மன்றாட்டு

புனித அந்தோனியாரை நோக்கி வேண்டுதல் ஜெபம்

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, இப்பலியை ஏற்றுக்கொண்டு, இறந்த உம் அடியார்கள் மீது உமது இரக்கத்தைப் பொழிவீராக; நீர் திருமுழுக்கின் அருளை வழங்கியுள்ள அவர்களுக்கு நிலையான மகிழ்ச்சியின் முழுநிறைவையும் அளிப்பீராக. எங்கள்.

செபிப்போமாக:

சர்வேசுரா சுவாமி ! புனித அந்தோனியாரை வணங்கி அவருடைய சலுகையை இரந்து, சாஷ்டாக்கமாக விழுந்து கிடக்கிற யாத்திரிகர்களாகிய அடியோர்கள் பேரில் தயை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்.