நற்கருணை ஆசீர்


மாண்புயர் பாடல்
மாண்புயர் இவ்வருட் சாதனத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறைகள் நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக
பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்க்கும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
புனித ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக -ஆமென்.

குரு: வானின்று அவர்களுக்கு அப்பம் அளித்தீரே! (பாஸ்கா காலத்தில் அல்லேலூயா சேர்க்கப்படும்)
அனைவரும்: இனிமை யாவும் தன்னகத்தே கொண்ட அப்பமிதுவே. (பாஸ்கா காலத்தில் அல்லேலூயா சேர்க்கப்படும்)
ஜெபிப்போமாக: இறைவா, இந்த வியப்புக்குறிய திருவருட்சாதனத்திலே, உம்முடைய திருப்பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச்சென்றீர். உமது திருவுடல், திருஇரத்தம் இவற்றின் மறைபொருளை வணங்கும் நாங்கள், உம்முடைய மீட்பின் பலனை இடைவிடாமல் அனுபவிக்க அருள் புரியும். தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்யும் உம்மை மன்றாடுகிறோம்.
அனைவரும்: ஆமென்
என் தேவனே பாடல்
என் தேவனே நான் உம்மை விசுவசிக்கிறேன் நான் உம்மை ஆராதிக்கிறேன் நான் உம்மை நம்புகிறேன் நான் உம்மை நேசிக்கிறேன் உம்மை விசுவசிக்காதவர்க்காகவும் உம்மை ஆராதிக்காதவர்க்காகவும் உம்மை நம்பாதவர்க்காகவும் உம்மை நேசிக்காதவர்க்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்